2014 ஆம் ஆண்டு எங்களுக்கு "இலக்கியா" என்ற மகாலட்சுமியைத் தந்தது பெரும்பேறு.
குழந்தை, வீட்டுக்குள் மலர்ந்து வளரும் பூ என்பார் என் நண்பர்
Wednesday, December 31, 2014
Wednesday, December 24, 2014
Santa கொடுத்து வச்சது
Edit Posted by கானா பிரபா with No commentsSanta மடியில் இலக்கியா உட்கார்ந்து ஒரு போட்டோ என்று திட்டம் நீண்ட கியூவைக் கண்டு இலக்கியா பொறுமை இழப்பு
Santa கொடுத்து வச்சது அவ்ளோ தான்
பாஷை தெரியாத பாப்பா
Edit Posted by கானா பிரபா with No commentsபாஷை தெரியாமல் மாட்டி சிரித்துச் சமாளிப்பது போலத்தான் நாம் பேச்சுக் கொடுக்கும் போது இந்தக் கைக்குழந்தையும் சிரித்துப் போக்குக் காட்டுகிறதோ நமக்கு?
Sunday, December 21, 2014
முதல் பிரமாண்டமான இரவு விருந்து
Edit Posted by கானா பிரபா with No commentsஇன்று இலக்கியா கலந்து கொண்ட முதல் பிரமாண்டமான இரவு விருந்து நண்பரின் தாய், தந்தையின் 50 வது திருமண நிறைவு ஆண்டுக் கொண்டாட்டம்
Thursday, December 18, 2014
தந்தையைக் கவனிப்பாள் :-)
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா அம்மா வைத்தியரிடம் போய்விட்டார் வழக்கமாக தாயிடம் இந்த நேரம் அடம் பிடிக்கும் மகள் அமைதியாக உறங்குகிறாள், தந்தையைக் கவனிப்பாள் :-)
Friday, December 12, 2014
முதன்முதலாக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு
Edit Posted by கானா பிரபா with No comments
இலக்கியா முதன்முதலாகத் தன் தாயுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்குப் போகிறார்
1 retweet3 likes
Wednesday, December 3, 2014
நான் வளர்கிறேனே அப்பா - இலக்கியா பிறந்து இன்றோடு மூன்று மாதம்.
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா பிறந்து மூன்று வாரங்கள் விசேட கண்காணிப்புப் பிரிவில் இருந்த காலங்களைப் பற்றி எழுத வேண்டும். ஆனால் அதையெல்லாம் தண்டி எங்கள் வீட்டுக்கு அவர் வந்த நாள் முதல் அவரின் படி நிலை வளர்ச்சியை ரசித்துக் கொண்டிருக்கிறோம் நானும் இலக்கியா அம்மாவும்.
குழந்தையை நன்றாக இறுகத் துணியால் சுற்றிப் படுக்க வைத்தாலேயே நன்றாகத் தூங்குவார் என்று தாதிமார் சொல்லி வைத்தனர். ஆனால் இலக்கியாவுக்குத் தன்னைத் துணியால் சுற்றிக் கட்டுவது பிடிக்காது.
வில்லன் பாசறையில் கையிற்றால் பிணைக்கப்பட்ட கதாநாயகி உடம்பை அசைத்து அசைத்துக் கழற்றிச் சுழற்றி எறிவது போல இலக்கியாவிடம் மாட்டுப்பட்ட துணி
இலக்கியாவுக்குத் தலைமுடி அதிகம் சிலவேளை தன் கையால் முடியைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பிப்பார் முடியைப் பிடித்த கையை எடுக்கத் தெரியாதாம்
இலக்கியாவைத் தூக்கி மடியில் இருத்தி வைத்து அவரோடு கதைக்கும் போது ஓ ஓ ஓ என்று இடைக்கிடை குரல் கொடுத்து ஆமோதிக்கிறார்;-)
தலையை எல்லாப் பக்கமும் பூமிப் பந்து போலச் சுழற்றிச் சுழற்றி வேடிக்கை பார்க்கிறார். கதை சொன்னால் உன்னிப்பாகக் கேட்கிறார். என் வாரிசு ஆச்சே
இலக்கியாவின் அம்மாவுக்குத் தான் 24 மணி நேரமும் இலக்கியாவைப் பார்க்கும் பொறுப்பு. அதனால் இலக்கியா தன் தாய் மீது கொண்டிருக்கும் நேசத்தையும் (பொறாமை எட்டிப் பார்த்தாலும்) பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இலக்கியா வளர்ந்த பிறகு அவரின் அம்மா செய்த பணிவிடைகளை எல்லாம் சொல்லி வைக்க வேண்டும்.
இலக்கியா பிறந்து அந்த மூன்று வாரங்கள் விசேட கண்காணிப்புப் பிரிவில் இருந்த சமயம் ஒருமுறை குழந்தையை ஏந்திக் கையில் வைத்திருந்தேன். முதன் முதலில் தன் பொக்கை வாயை விரித்துச் சிரித்த கணம் ஆனந்தத்தில் கண்கள் உடைப்பெடுத்துப் பெருகிவிட்டது எனக்கு அப்போது.
குழந்தை சிரித்தால் நரி வெருட்டுறதாம் என்று ஒரு சிலரும், கடவுளோட கதைக்கிறது என்று இன்னும் சிலரும் சொன்னார்கள்.
ஆனால் இரண்டு மாதங்களிலேயே எங்கள் முகம் பார்த்துச் சிரிக்கப் பழகிவிட்டார். எந்த நேரமும் இலக்கியா தனது அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். சில சமயம் அது சிரிப்போடு இருக்கும்.
எங்கள் வீட்டின் சுவரில் ஒட்டியிருக்கும் கண்டிய நடனம் என்ற நீண்ட சுவர்ச்சித்திரத்தைக் காணும் போது இவருக்கு ஏனோ குஷி பிறந்து விடும். அதைப் பார்த்துப் பார்த்துச் சிரிப்பார்.
தாய் யசோதையின் கையில் இருக்கும் கண்ணன் படத்தைக் கண்டால் வாயால் ஏதோ சொல்ல எத்தனிப்பது போல அபிநயம் பிடித்துப் பின்னர் அந்தப் படத்தைப் பார்த்துச் சிரிக்கிறார்.
அத்தனை பெருந்துன்பங்களையும் துடைத்து எறிந்துவிடுகிறது ஒரு குழந்தையின் மென் சிரிப்பு.
Thursday, November 20, 2014
நண்பரின் 5 வயது மகள் எங்களைப் பார்த்து வரைந்தது
Edit Posted by கானா பிரபா with No commentsSunday, November 16, 2014
Tom & Jerry பூனைக்குட்டி
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா பாப்பா தூங்கும் நேரத்தில் Tom & Jerry இல் வரும் பூனைக்குட்டி மாதிரிப் பதுங்கிப் பதுங்கி வீட்டில் நடக்கிறேன்
Wednesday, November 12, 2014
பறவைச் சத்தம்
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா குஷி மூட்ல இருந்தா பறவைச் சத்தம் போடுகிறார் அதையே நான் பதிலுக்குச் செஞ்சா புருவத்தைச் சுருக்கிப் பார்க்கிறார்
Tuesday, November 11, 2014
திருப்பள்ளி எழுச்சி
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா அதிகாலை மூன்று மணிக்கே திருப்பள்ளி எழுச்சி பாடியாச்சு 



Sunday, November 9, 2014
மெத்தை & கட்டாந்தரை
Edit Posted by கானா பிரபா with No commentsமெத்தை (cot உடன்) வாங்கினேன் (இலக்கியா) தூக்கத்தை வாங்கல - இலக்கியா அப்பா பாடும் பாட்டு
கட்டாந்தரையில் துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணைச் சொக்குமே அது இந்தக் காலம் தான் - இலக்கியா பாடும் பாட்டு
கட்டாந்தரையில் துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணைச் சொக்குமே அது இந்தக் காலம் தான் - இலக்கியா பாடும் பாட்டு

Sunday, October 26, 2014
@amas32 அம்மா
Edit Posted by கானா பிரபா with No commentsSaturday, October 25, 2014
ராமண்ணா தூக்கம் தூக்கமா வருதே
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா கடந்த ஒரு மணி நேரமா பாட்டுக் கேட்டுக்கொண்டே என் மடியில் சாய்ந்து கொட்டக் கொட்ட விழிச்சிங் ராமண்ணா தூக்கம் தூக்கமா வருதே எனக்கு
Friday, October 24, 2014
இலக்கியா ஒரு கம்யூனிஸ்ட்
Edit Posted by கானா பிரபா with No commentsகண்ணாமூச்சி (முழிச்சி) என்பது இலக்கியா தூங்குறது போல பாவனை காட்டுவதாக அர்த்தம்
இலக்கியா அடிக்கடி ஒரு கையை உயர்த்திப் பிடிக்கிறதைப் பார்க்கும் போது ஒரு கம்யூனிஸ்ட் களை தெரியுது ம்ம் ஒரு இட்லி போதும்
இலக்கியா அடிக்கடி ஒரு கையை உயர்த்திப் பிடிக்கிறதைப் பார்க்கும் போது ஒரு கம்யூனிஸ்ட் களை தெரியுது ம்ம் ஒரு இட்லி போதும்
Thursday, October 23, 2014
இலக்கியா பிறந்து முதல் தடவையாக மகப்பேற்று வைத்தியரிடம்
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா பிறந்து முதல் தடவையாக மகப்பேற்று வைத்தியரிடம் விஜயம்.
இவர் தமிழகத்தவர் இலக்கியா என்ற பெயரைக் கேட்டதும் மிகுந்த சந்தோஷமடைந்தார்
சிட்னி முருகனிடம் முதல் தடவையாக இலக்கியா
Edit Posted by கானா பிரபா with No commentsசிட்னி முருகனிடம் இலக்கியா முதல் தடவையாக சென்று வழிபாடு, இனிதே நிறைந்தது.
Saturday, October 11, 2014
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
Edit Posted by கானா பிரபா with No commentsFriday, October 3, 2014
இலக்கியா பிறந்ததுக்கு வாழ்த்து
Edit Posted by கானா பிரபா with No comments- In reply to கானா பிரபா@kanapraba ரொம்ப உணர்ச்சிபூர்வமாமான பதிவு. இலக்கியா is gifted :-)) @Sricalifornia0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba :)))) இலக்கியா அப்பா டைமிங்ரைமிங்குகள் @umakrishh0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba இனாவுக்கு இனா - இணுவில் இலக்கியா !! இவள் ஸிட்னி இலக்கியா !!0 retweets0 likes
- In reply to கானா பிரபா0 retweets0 likes
- In reply to கானா பிரபா
- @kanapraba இலக்கியாவிற்கும்-இலக்கியா அப்பாவிற்கும் வாழ்த்துக்கள்!0 retweets0 likes
- @RaKaMaLi இலக்கியா ஒப்புதலுடன் தான் அனைத்து ட்வீட்டும் வெளியாகிறது. ;))) @kanapraba @2nrc @thivakaran_0 retweets0 likes
- 0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba மிக்க மகிழ்ச்சி. பண்பும் அன்பும் நிறைந்த ஒருதகப்பனுக்கு மகளாய் பிறந்த இலக்கியா , தங்க பஞ்சு பொதியை பெற்ற நீங்கள், தங்கள் மனைவி 10 retweets0 likes
- இன்றைய தினத்தில் ஒரே மகிழ்ச்சி @kanapraba வின் இலக்கியா செய்தி பகிர்வுதான்! ராஜா இசையின் தாலாட்டுடன் வாழ்க! வளர்க!!0 retweets0 likes
- @kanapraba சகோதரா வாழ்த்துக்கள் இப்பதான் உங்க பொக்கிஷம் இலக்கியா பற்றிய பதிவு படித்தேன் அற்புதம் :-)) வாழ்க வளமுடன்..0 retweets1 like
- Ganesh Chandru liked@kanapraba வாழ்த்துக்கள்! .... இலக்கியா - ரொம்ப அழகாருக்கு :-)0 retweets1 like
- In reply to தமிழ்ப்பறவை@Tparavai கானக்குயிலும் கூண்டுக்குயில்தானா? இது தெரியாம பேச்சிலர்னு பொறாமைப்பட்டுட்டேனே. @kanapraba இலக்கியா அப்பாவிற்கு வாழ்த்துகள் :-)0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba ரொம்ப சந்தோஷமாவும் நெகிழ்ச்சியாவும் இருக்கு ! வாழ்த்துகள் உங்களுக்கும் இலக்கியா பாப்பவிற்கும் ! :)0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba இலக்கியா அப்பாக்கு வாழ்த்துக்கள்!நல்லா இருங்க புள்ளகுட்டியோட. @npgeetha0 retweets1 like
- Sri Retweeted
- @kanapraba இந்த சந்துல எவ்ளோ அடிச்சு கேட்டோம். வாயே திறக்கல.வாழ்த்துக்கள் இலக்கியா (எ) மகாலஷ்மிக்கு. (இனிமே உனக்கு மரியாத கிடையாது) அவளுக்கே0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba மனம் கனிந்த வாழ்த்துகள் நண்பா! இலக்கியா இன்னுமோர் நூற்றாண்டு இருக்க வாழ்த்துஸ், ஆசீர்வாதங்கள், பிராத்தனைகள் :-)0 retweets0 likes
- In reply to கானா பிரபா
- @kanapraba ஆம் நீர் அதிர்ஷ்டசாலியே..இளையராஜா ஐந்தெழுத்து இலக்கியா ஐந்தெழுத்து..இயில் துவங்குவதும் பொருத்தமே. 4/n0 retweets0 likes
- @kanapraba ஆங்கிலேயன் இலக்கியா பெயரை உச்சரிக்கும் போது லக்கியா லக்கியா எனக்கேட்கும்.நீ ரொம்ப லக்கியா லக்கியான ஆளய்யா என்று கேட்கும்.3/n0 retweets0 likes
- In reply to சம்ரிதா@jothishna பிறந்த ஒரு மாதத்தில் இளையராஜா பாடல்களால் தாலாட்டப்பட்ட இலக்கியா ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை தான் @kanapraba0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba வாழ்த்துக்கள் அண்ணா, மிகவும் உணர்வுப்பூர்வமான பதிவு, கண்டிப்பா புத்தகம் எழுதுங்க, பலருக்கும் பயன்படும்.. இலக்கியா க்கு ஒரு " hi "0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba என் கண்களிலும் ஏனோ ஆனந்தக் கண்ணீர். உங்களைப் போன்றொரு உன்னதமான தந்தையைக் கொண்ட இலக்கியா அதிர்ஷ்டக் குழந்தை தான். வாழ்த்துக்கள்.0 retweets1 like
- மிஸ்டர் கொக்கி and 199 others follow@kanapraba இலக்கியா இலக்கியமாய் வாழ என் வாழ்த்துகள்... @arivukkarasu0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba ஆஹா .. மயக்கும் சிரிப்போடு இலக்கியா .. மறக்காம திருஷ்டி சுத்திப் போடுங்க :))0 retweets0 likes
- @kanapraba வாழ்த்துக்கள்! மிகவும் நெகிழ்ச்சியான தருணத்தை பதிவு செய்துள்ளீர்கள். May GOD bless இலக்கியா.0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba மனமார்ந்த. வாழ்த்துகள், இலக்கியா அப்பா அம்மாவுக்கு ...... ! மகளதிகாரம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது !0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba ரொம்ப உணர்ச்சிகரமா இருந்துச்சி...ரொம்ப சந்தோசம் ஸார்..இலக்கியா ரொம்ப cute:))0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba உணர்ச்சிமிக்க பதிவு பிரபா..தனிப்பட்ட முறையில் என்னால் உங்களின் வலியை உணர முடிகிறது .இலக்கியா நன்மைகள் பல பெற்று வாழ வாழ்த்துகள்!0 retweets0 likes
- In reply to கானா பிரபா@kanapraba 'தங்கப் பேழை' இலக்கியா, இலக்கியமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்துகள் நண்பா,தந்தை ஆனதற்கும,இது போன்ற சிறந்த கட்டுரை தந்ததற்கும்0 retweets0 likes
Subscribe to:
Posts (Atom)